Monday, September 3, 2012

உன் வரவை ........

சிறகுகள் இருந்தும் பறக்க முடியாத 
கூண்டுக்க் கிளி போல 
உன் நினைவுகள் இருந்தும் 
அருகில் இருக்க முடியாத 
ஒரு உயிரானேன் நான்.... 
பல உறவுகளுக்கு மத்தியில் 
உள்ளம் தேடும் ஒரே ஒரு உயிர் 
நீ மட்டுமே....
காத்திருப்பு கூட ஒரு அழகான 
கவிதை  என்பதை 
உனக்காக காத்திருக்கும் போதுதான் 
உணர்கிறேன்..... 
உன்னை உயிராக நேசிக்கிறேன்... 
உன் வரவை வானவில் போல 
வரைந்து வைத்திருக்கிறேன் ...

No comments:

Post a Comment

Depacco.com
free counters