இரவுக்கும் உன் இதயத்திற்கும்
நிறம் ஒன்று என்பதை
நீ சொன்ன வார்த்தையில் அறிந்து கொண்டேன்
என்ன என்று கேட்கிறாயா?
அதுதான்
இதுவரை இருந்த நம் காதலை
இன்றுடன் மறந்து விடுவோம்....
இதை சொல்ல உனக்கென்றால்
ஒரு நிமிடம் தேவைப்பட்டிருக்கலாம்
ஆனால்.
இதை ஏற்றுக்கொள்ள எனக்கு
ஓராயிரம் ஜென்மங்கள் போதாது
என்பதை நீ அறிவாயா?

No comments:
Post a Comment