Tuesday, October 30, 2012

உன்னில் நான்

பல ரோஜாக்களை காட்டி
என் மனதை வருடிய நீ
இன்று என் வாழ்வையும்
ரோஜாக்களைப் போல்
வாசம் வீச வைத்து விட்டாய்....
உன்னில் நான் என்
உயிரைப் பார்க்கிறேன்....
உன்னை நான்
என் உயிராய் நேசிக்கிறேன்...
உனக்குள் தான் நான்
உருகியும் போகிறேன்.....
உன் மீது நான் கொண்ட காதல்
என் உயிரிலும் மேலானது!
என் கடைசி நிமிடங்களில்  கூட
உன் தோல் மீதே
தலை சாய்வேன்!

No comments:

Post a Comment

Depacco.com
free counters