Wednesday, March 28, 2012
Sunday, March 25, 2012
ஆசை
நேரம் நிற்பதும் இல்லை தூரம் குறைவதும் இல்லை.....
பாரமான இவ்வுலகில்
பறந்து செல்லும் பறவைகளில்
பாதியாவது நான் இருக்க வேண்டும்
நிறமே இல்லாத நீரினில்
நீந்தித் திரியும் மீன்களில்
ஒரு நிமிடமாவது எனக்கு வேண்டும்
கரைத்து விட முடியாத
கவிதைகளை சுமந்து வரும் காற்றினில்
கதை பேசும் கணங்கள் வேண்டும்....
கடைசி வாழ்க்கையை
கல்லறையில் கடந்து கொண்டிருக்கும்
கருணையுள்ள உள்ளங்களின்
மௌனம் வேண்டும்......
அனைத்தையும் விட
அழகான அந்தி மழையில்
அரை நிமிடம் அமர்ந்திருக்க வேண்டும்....
ஆயுள் முடியும் வரை கூட.....
என் ஆசைகளின் ஒரு வரி தான்
இந்த வார்த்தைகளே இல்லாத கவிதை....
ஆனால், என் மொத்த ஆசைகளையும்
அடக்கி விட எழுத்துக்களும் இல்லை
எழுதுகோலும் இல்லை....
Wednesday, March 14, 2012
Tuesday, March 13, 2012
Monday, March 12, 2012
வாழ்வின் வலி
அறியாத ஒருவனிடம் அழகான என் வாழ்க்கையை
புரியாமலே ஒப்படைப்பதை விட....
அனைத்தும் அறிந்த உன்னிடம்
கண்களை மூடிக்கொண்டு
கடைசி வரை வாழ நான் தயார்.....
உன் மீது உள்ள நம்பிக்கை
என் உயிர் மீது கூட எனக்கில்லை.....
தந்தையின் தன் மானத்திட்காகவும்
அன்னையின் அதட்டல்களுக்காகவும்
என் வாழ்க்கையை அறியாத ஒருவனிடம்
அடகு வைக்க என்னால் முடியாது......
நான் காதலித்த நீ மட்டுமே எனக்கு
கணவனாகவும் வர வேண்டும்.....
இல்லையென்றால் என் இதயம் துடிப்பதை நிறுத்தி விடும்
உன் பெயரின் இறுதி எழுத்தோடு..........
Friday, March 2, 2012
என் வலி
வழியினில் வந்த நீ என் வாழ்வினில் தந்த வலிகள்
இன்று என் விழிகளில் வழிகின்றது .......
கண்ணீர் துளிகளாக.....
இரு விழிப்பார்வையும்
ஒருவனின் வருகைக்காக
வலிகளையும் மறந்து
விழிகளைத் திறந்து
காத்துக்கொண்டிருக்கின்றது......
ஆனால்
கழிந்து கொண்டிருப்பது நாட்கள் மட்டும்தான்....
அதில் அழிந்து கொண்டிருப்பது என் வாழ்க்கையும் தான்...
Thursday, March 1, 2012
Subscribe to:
Comments (Atom)







