Friday, November 23, 2012

பிடிக்கும்....

நிலவைப் பிடித்த எனக்கு 
உன் நினைவுகளையும் பிடிக்கும்...
மலரைப் பிடித்த எனக்கு...
உன் மனதையும் பிடிக்கும் 
இரவைப் பிடித்த எனக்கு 
உன் இமைகளையும் பிடிக்கும்.....
மழையைப் பிடித்த எனக்கு 
உன் பிழைகளையும் பிடிக்கும்....
ஆனால்,
உன்னைப் பிடித்த எனக்கு 
உலகில் வேறு எதையும் பிடிக்கவில்லை...
உன்னைத் தவிர.... 

Sunday, November 18, 2012

மருதாணி

கைகளில் இட்ட மருதாணி
உன் மனதைப் போலவே 
அழகாகி விட்டது.............
அன்பிலே உருவான நீ.........
என் ஆள்  மனதையும் 
உன் அடிமையாய்  ஆக்கிவிட்டாய்.....
ஆயுள் வரை நான் வேண்டி நிற்கிறேன் 
உன் அளவிட முடியாத அன்பை மட்டும் .............

Tuesday, November 13, 2012

புன்னகை

நான் பின்னால் திரும்பிப் பார்த்து 
புன்னகை செய்தது உனக்கல்ல...
உனக்குள்ளே இருக்கும் என் 
இதயத்திற்கும் அல்ல....
மாறாக ... நீ என்னைத் தாண்டிச் 
செல்லும்  போது 
என்னைத் தொட்டுச் சென்ற 
உன் சுவாசக்  காற்று தான்...
என் முகத்தில் புன்னகையை தந்தது...
புது வசந்தத்தையும் தந்தது.....
நீ தான் என் சொந்தம் என்றும் சொன்னது...

Friday, November 9, 2012

மழலை


மழலைகளின் மொழிகளும் 
மறந்து சென்ற நினைவுகளும் 
எப்பொழுதும்    புரியவே புரியாது ...
மழலை சிரிப்பில் உள்ளம் 
மயங்கி விடும் போது ......
கலங்கி விட்ட நெஞ்சம் கூட 
கொஞ்சம்....மலர்ந்து விடும்....
குழந்தையாகவே இருக்கும் வரம் 
கிடைத்தால் என்ன? 
நாம் வாழ் முழுவதும் 
வசந்தமாகவே இருந்து விடலாம்....

Sunday, November 4, 2012

உனக்கே

உன் இரண்டு நிமிட மௌனத்தில் 
என் இருண்டு போன இதயம் 
மீண்டும் இறந்து போக நினைக்கவில்லை....
மாறாக 
உன்னைப் பிரிந்து வாழ்ந்த 
அந்த நொடிகளில் 
உன்னில் புரிந்து கொள்ள வேண்டிய 
பல விடயங்களை நான் அறிந்தும் கொண்டேன்...
உனக்கே உரிமையான என் வாழ்க்கை 
என்றும் உனக்காகவே உயிர் வாழ்கிறது...
உன்னை மட்டுமே   உயிராக 
நேசிக்கவும் செய்கிறது.....
சுவாசிக்கவும் செய்கிறது....


Depacco.com
free counters