நிலவைப் பிடித்த எனக்கு
உன் நினைவுகளையும் பிடிக்கும்...
மலரைப் பிடித்த எனக்கு...
உன் மனதையும் பிடிக்கும்
இரவைப் பிடித்த எனக்கு
உன் இமைகளையும் பிடிக்கும்.....
மழையைப் பிடித்த எனக்கு
உன் பிழைகளையும் பிடிக்கும்....
ஆனால்,
உன்னைப் பிடித்த எனக்கு
உலகில் வேறு எதையும் பிடிக்கவில்லை...
உன்னைத் தவிர....
No comments:
Post a Comment