நான் பின்னால் திரும்பிப் பார்த்து
புன்னகை செய்தது உனக்கல்ல...
உனக்குள்ளே இருக்கும் என்
இதயத்திற்கும் அல்ல....
மாறாக ... நீ என்னைத் தாண்டிச்
செல்லும் போது
என்னைத் தொட்டுச் சென்ற
உன் சுவாசக் காற்று தான்...
என் முகத்தில் புன்னகையை தந்தது...
புது வசந்தத்தையும் தந்தது.....
நீ தான் என் சொந்தம் என்றும் சொன்னது...

No comments:
Post a Comment