உன் விழிகளில்
என் விடை தெரியாத வினாக்களுக்கு
விடை காண முயன்றேன்......
ஆனால்,
விரைந்து செல்லும்
வினாடிகளுக்கு மத்தியில் .....
மீண்டும் வினாக்களே விடைகளாக கிடைத்ததில்
விடிந்தும் என் விழிகள்
இன்னும் விழிக்கவில்லை ....
காரணம் ...
காரணம் ...
கனவுகளாவது கதை சொல்லும்
என்ற நம்பிக்கையில்.......
என் கண்கள் இன்னும் காவல் இருக்கிறது
நம் காதலுக்காக ......


No comments:
Post a Comment