என் விழிகளில் பட்ட
வலிகளில் ...
உன் உருவமும் ஒன்று ...
உன்னைப் பார்த்த அந்த நொடியிலிருந்து..
என் விடியலையும் நான்
மறந்து விட்டேன் ......
உன்னுள் சங்கமித்து விட்ட
என் எண்ணங்கள் என்றும்
என்னுள் உன்னையே தேடுகின்றது....
உனக்குள் உறைந்து விட்ட நான்
எனக்குள் உன்னை மறைத்து வைத்தேன்..
ஏன் தெரியுமா?
உன்னை யாரும் அறியாமல் இருக்க அல்ல...
உன்னை நான் மட்டுமே அறிந்திருக்கத் தான் .....


No comments:
Post a Comment