Tuesday, December 25, 2012

பிரிவிலும்.........

விழித்திருக்கும் என் கண்களில் வரும் 
உன் விம்பங்களை நான் நேசிக்கிறேன்....
விழிக்காமல் இருக்கும் என் இரவுகளில் 
உன் எண்ணங்களை நான் சுவாசிக்கிறேன்...

நீ  வரும் பாதைகள் தூரமாக இருந்தாலும்....
வேகமாகவே செல்கின்றது நேரம்....
மேகங்கள் சேர்ந்து உருவான இருள் போல 
சோகங்கள் என்னில் சூழ வைத்தாய்...

உறவுகள் அனைத்திலும் என் உயிரை 
உணர வைத்த ஓரே உள்ளம் நீதான்....
உன் வருகைதான் என் வாழ்வை...
வளமாக்கிய வசந்த காலம்.....

இன்று உன் பிரிவை எண்ணி 
என் உணர்வை இழப்பதா? இல்லை 
உன் வரவை எண்ணி 
என் உயிரை வளர்ப்பதா என்று 
எனக்குத் தெரியவிலை.....
ஆனால்,
பிரிவிலும் உன்னை நான் 
ப்ரியமுடன் நேசிக்கிறேன்.....
அதனால்தான்  நான் பிரிவையும் நேசிப்பவளாகிவிட்டேன்...

No comments:

Post a Comment

Depacco.com
free counters