கனமான வலிகளுக்கு மத்தியிலும்
என் விழிகள் புன்னகை செய்கின்றது......
ஏனென்றால் ....
என் புன்னகையின் விலை
நீ அல்லவா......
நினைத்தவுடன் நெருங்கி வர
நீ என் அருகில் இல்லை ,,,,,,,,,,
நினைவுகளை மட்டுமே
சுமந்து கொண்டிருக்கும் எனக்கு
என்றும் நீ சுமையாக இருந்ததில்லை.....
கண் இமைகளின் நடுவே உள்ள
உன் உருவம் என்னை
உயிர் வாழ வைக்கின்றது
ஆனால்,
கண்ணீரிலே வாழும் என் ஜீவன்
உன்னையே நேசிக்கின்றது.....


No comments:
Post a Comment