அவன் வார்த்தைகளில்
என் வாழ்க்கை....
என் வாழ்க்கையில்
அவன்தான் வசந்தம்....
எதிர் வரும் காலங்களை...
எவரும் அறிவதில்லை....
ஆனால், ,
என் எதிர் காலம்
அவன் எதிரில் மட்டும் தான்
என்பதை நான் மட்டுமே அறிவேன்...
உலகத்திற்கு நீ ஒருவனாக
இருக்கலாம்......
ஆனால்,
என் உலகமே நீ தானே....
உருகும் கனங்களில் ...
உருகி விடாமல் இருக்கும்
உன் நினைவுகள்
உலக அதிசயமல்ல....
என் உணர்வுகளின் புது சுகம்...


No comments:
Post a Comment