Sunday, December 30, 2012

அவன் நினைவுகளுடன்

ஒவ்வொரு நாளும் கேட்கும் 
அவன் குரலை....
ஒரு நாள் கேட்க 
முடியாமல் போனால்......
மறு நாள் விடியும் வரை 
சிறு துளி கூட உறங்காது 
என் கரு விழிகள்.....
அவன் நினைவுகளுடன் 
ஓடும் நிமிடங்கள் ...
தான்....
இவள் நிம்மதியைத் தேடும் 
தருணங்கள் ......
உயிர் வாழும் காலமெல்லாம்....
உன் உறவாக நான் இருப்பேன்....
உயிர் பிரியும் நேரத்தில்....
உன் உணர்வோடு கலந்திருப்பேன்.....

No comments:

Post a Comment

Depacco.com
free counters