Sunday, February 24, 2013

இந்த மண்ணில் ........

உன்னைத் தேடும் 
என் விழிகளை வேண்டுமானால் 
ஏமாற்றி விடலாம்.....
ஆனால் 
உன்னில் நான் தொலைத்து விட்ட 
என் இதயத்தை 
எப்படி நான் ஏமாற்றுவது?
உன்னில் நானும்
என்னில் நீயும்
என்று இந்த மண்ணில்
எண்ணி வாழ்வதே
என் விதி என்று இருந்தால்...
என் கண்ணில் உன்னை வைத்து
கன்னியாகவே வாழ்ந்திடுவேன்.....
நான் கண் மூடும் வரை..... 

மாய வலை ....

தித்திக்கும் உன் நினைவுகளை 
சந்திக்கும் போதுதான் 
காத்திருக்கும் வலிகள் கூட 
காணாமல் போய் விடுகின்றது.......
என் கனவுகள் நீயாக இருக்கும் வரை 
என் கவிதைகள் உன் பெயர் சொல்லும் 
இது விதியின் செயல் அல்ல
நீ செய்த மாய வலை ....

இதயம்.....

உன் வருடும் பார்வைகளால்........
திருடப்பட்ட என் இதயம்.....
தித்திக்கும் உன் நினைவுகளை மட்டுமே
இப்போது சிந்திக்கின்றது......

Sunday, December 30, 2012

அவன் நினைவுகளுடன்

ஒவ்வொரு நாளும் கேட்கும் 
அவன் குரலை....
ஒரு நாள் கேட்க 
முடியாமல் போனால்......
மறு நாள் விடியும் வரை 
சிறு துளி கூட உறங்காது 
என் கரு விழிகள்.....
அவன் நினைவுகளுடன் 
ஓடும் நிமிடங்கள் ...
தான்....
இவள் நிம்மதியைத் தேடும் 
தருணங்கள் ......
உயிர் வாழும் காலமெல்லாம்....
உன் உறவாக நான் இருப்பேன்....
உயிர் பிரியும் நேரத்தில்....
உன் உணர்வோடு கலந்திருப்பேன்.....

Saturday, December 29, 2012

ப்ரியமுடன் நேசிக்கிறாய்....


என்னைப் பிரிய மனமில்லாமல்.....
பிரிந்து சென்றாய்.....
அந்த பிரியும் தருவாயிலும் 
நீ என்னை புரிந்து கொண்டதால் தான், 
இன்று வரை என்னைப் ப்ரியமுடன் நேசிக்கிறாய்....
பிரிவிலும் உன் பிரியத்தை நேசிக்கிறேன்...
நீ தூர இருந்தாலும் 
உன் அன்பு மட்டும் 
இன்னும் ஆழமாகவே இருக்கின்றது...
இன்று உன் பிரிவையும் நேசிக்கிறேன் 
அதில் நான் கண்ட உன் பிரியத்தையும் நேசிக்கிறேன்...
என் முகத்தில் புன்னகையைத் தந்த 
உனக்காக இந்த உயிர் எப்பொழுதும் 
காத்திருக்கும் உனக்காகவே.....

Thursday, December 27, 2012

என் எதிர் காலம்

அவன் வார்த்தைகளில் 
என் வாழ்க்கை....
என் வாழ்க்கையில் 
அவன்தான் வசந்தம்....
எதிர் வரும் காலங்களை...
எவரும் அறிவதில்லை....
ஆனால், ,
என் எதிர் காலம் 
அவன் எதிரில் மட்டும் தான் 
என்பதை நான் மட்டுமே அறிவேன்...
உலகத்திற்கு நீ ஒருவனாக 
இருக்கலாம்......
ஆனால்,
என் உலகமே நீ தானே.... 
உருகும் கனங்களில் ...
உருகி விடாமல் இருக்கும் 
உன் நினைவுகள் 
உலக அதிசயமல்ல....
என் உணர்வுகளின் புது சுகம்...

Tuesday, December 25, 2012

பிரிவிலும்.........

விழித்திருக்கும் என் கண்களில் வரும் 
உன் விம்பங்களை நான் நேசிக்கிறேன்....
விழிக்காமல் இருக்கும் என் இரவுகளில் 
உன் எண்ணங்களை நான் சுவாசிக்கிறேன்...

நீ  வரும் பாதைகள் தூரமாக இருந்தாலும்....
வேகமாகவே செல்கின்றது நேரம்....
மேகங்கள் சேர்ந்து உருவான இருள் போல 
சோகங்கள் என்னில் சூழ வைத்தாய்...

உறவுகள் அனைத்திலும் என் உயிரை 
உணர வைத்த ஓரே உள்ளம் நீதான்....
உன் வருகைதான் என் வாழ்வை...
வளமாக்கிய வசந்த காலம்.....

இன்று உன் பிரிவை எண்ணி 
என் உணர்வை இழப்பதா? இல்லை 
உன் வரவை எண்ணி 
என் உயிரை வளர்ப்பதா என்று 
எனக்குத் தெரியவிலை.....
ஆனால்,
பிரிவிலும் உன்னை நான் 
ப்ரியமுடன் நேசிக்கிறேன்.....
அதனால்தான்  நான் பிரிவையும் நேசிப்பவளாகிவிட்டேன்...

Monday, December 17, 2012

ரோஜா

நீ பார்க்கும் பார்வையில் 
நான் ரோஜாவகிறேன்.....
நீ பேசும் வார்த்தையில் 
நான் பனித்துளியாகிறேன் ....
மேலும் , 
நீ என் அருகில் வரும் போது ...
நான் பனித்துளி படர்ந்த 
ரோஜாவாக மாறிவிடுகிறேன்....
இது நான் சொன்னதல்ல...
நீயாகவே என்னில்  கண்டது......

Sunday, December 16, 2012

அந்த நொடி

என் விழிகளில் பட்ட 
வலிகளில் ...
உன் உருவமும் ஒன்று ...
உன்னைப் பார்த்த அந்த நொடியிலிருந்து..
என் விடியலையும்  நான் 
மறந்து விட்டேன் ......
உன்னுள் சங்கமித்து விட்ட 
என் எண்ணங்கள் என்றும் 
என்னுள் உன்னையே தேடுகின்றது....
உனக்குள் உறைந்து விட்ட நான் 
எனக்குள் உன்னை மறைத்து வைத்தேன்..
ஏன் தெரியுமா?
உன்னை யாரும் அறியாமல் இருக்க அல்ல...
உன்னை நான் மட்டுமே அறிந்திருக்கத்  தான் .....


Thursday, December 6, 2012

புன்னகை

கனமான வலிகளுக்கு  மத்தியிலும் 
என் விழிகள் புன்னகை செய்கின்றது......
ஏனென்றால் ....
என் புன்னகையின் விலை 
நீ அல்லவா......
நினைத்தவுடன்  நெருங்கி   வர 
நீ என் அருகில் இல்லை ,,,,,,,,,,
நினைவுகளை மட்டுமே 
சுமந்து கொண்டிருக்கும் எனக்கு 
என்றும் நீ சுமையாக இருந்ததில்லை.....
கண் இமைகளின் நடுவே உள்ள 
உன் உருவம் என்னை 
உயிர் வாழ வைக்கின்றது 
ஆனால், 
கண்ணீரிலே வாழும் என் ஜீவன் 
உன்னையே நேசிக்கின்றது.....

Monday, December 3, 2012

வினா

உன் விழிகளில் 
என் விடை தெரியாத வினாக்களுக்கு 
விடை காண முயன்றேன்......
ஆனால்,
விரைந்து செல்லும் 
வினாடிகளுக்கு மத்தியில் .....
மீண்டும் வினாக்களே விடைகளாக  கிடைத்ததில் 
விடிந்தும் என் விழிகள் 
இன்னும் விழிக்கவில்லை ....
காரணம் ...
கனவுகளாவது கதை சொல்லும் 
என்ற நம்பிக்கையில்.......
என் கண்கள் இன்னும் காவல் இருக்கிறது
நம்  காதலுக்காக ......

Friday, November 23, 2012

பிடிக்கும்....

நிலவைப் பிடித்த எனக்கு 
உன் நினைவுகளையும் பிடிக்கும்...
மலரைப் பிடித்த எனக்கு...
உன் மனதையும் பிடிக்கும் 
இரவைப் பிடித்த எனக்கு 
உன் இமைகளையும் பிடிக்கும்.....
மழையைப் பிடித்த எனக்கு 
உன் பிழைகளையும் பிடிக்கும்....
ஆனால்,
உன்னைப் பிடித்த எனக்கு 
உலகில் வேறு எதையும் பிடிக்கவில்லை...
உன்னைத் தவிர.... 

Sunday, November 18, 2012

மருதாணி

கைகளில் இட்ட மருதாணி
உன் மனதைப் போலவே 
அழகாகி விட்டது.............
அன்பிலே உருவான நீ.........
என் ஆள்  மனதையும் 
உன் அடிமையாய்  ஆக்கிவிட்டாய்.....
ஆயுள் வரை நான் வேண்டி நிற்கிறேன் 
உன் அளவிட முடியாத அன்பை மட்டும் .............

Tuesday, November 13, 2012

புன்னகை

நான் பின்னால் திரும்பிப் பார்த்து 
புன்னகை செய்தது உனக்கல்ல...
உனக்குள்ளே இருக்கும் என் 
இதயத்திற்கும் அல்ல....
மாறாக ... நீ என்னைத் தாண்டிச் 
செல்லும்  போது 
என்னைத் தொட்டுச் சென்ற 
உன் சுவாசக்  காற்று தான்...
என் முகத்தில் புன்னகையை தந்தது...
புது வசந்தத்தையும் தந்தது.....
நீ தான் என் சொந்தம் என்றும் சொன்னது...

Friday, November 9, 2012

மழலை


மழலைகளின் மொழிகளும் 
மறந்து சென்ற நினைவுகளும் 
எப்பொழுதும்    புரியவே புரியாது ...
மழலை சிரிப்பில் உள்ளம் 
மயங்கி விடும் போது ......
கலங்கி விட்ட நெஞ்சம் கூட 
கொஞ்சம்....மலர்ந்து விடும்....
குழந்தையாகவே இருக்கும் வரம் 
கிடைத்தால் என்ன? 
நாம் வாழ் முழுவதும் 
வசந்தமாகவே இருந்து விடலாம்....
Depacco.com
free counters